விலைமாதுக்கள் சங்கம் தொடங்குகிறார் ஸ்ரேயா!






சென்னை, ஏப்.12-
விலைமாதுக்களுக்கான மறுவாழ்வு சங்கத்தை தொடங்க நடிகை ஸ்ரேயா முடிவு செய்துள்ளார். த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்டவர் நடிகை ஸ்ரேயா. சத்தமில்லாமல் ஏழைகளுக்கு ஏராளமான உதவிகளை செய்வதுடன், ஆசிரமங்களுக்கு சென்று தியானம், யோகா போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் விலைமாதுகளின் வாழ்க்கை போராட்டங்கள் ஸ்ரேயாவை ரொம்பவே வேதனையடையச் செய்துள்ளதாம். வறுமையால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலில் தள்ளப்படும் பெண்கள், ஏழ்மையை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கடத்தி போய் விபசாரத்தில் தள்ளப்படும் பெண்கள் போன்றோருக்கு உதவும் வகையில் புதிய அமைப்பை தொடங்க ஸ்ரேயா முடிவு செய்துள்ளார்.
இந்த மறுவாழ்வு சங்கம் மூலம் விலைமாதுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் நடிகை ஸ்ரேயா அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்திகள்
நடிகை ஷிகா உடன் ஒரு சந்திப்பு
நடிகர் விக்னேஷ் உடன் ஒரு சந்திப்பு
உற்சாகத்தில் மிதக்கிறார் ப்ரியாமணி
|